Saturday 21 September 2013

6 மெழுகுவத்திகள் விமாசனம்


நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல தமழ் சினிமா. மகளையோ மகனையோ யாரவது கடத்திவிட அவாகளை காப்பாற்ற கிளம்பும் ஹாலிவுட் அப்பா ஹீரோ போன்ற கதைதான் ஆனால் அதில் மிதமிஞ்சிய ஹீரோயிசம் மட்டுமே மிஞ்சியிருக்கும். ஆனால் இந்த படத்தில் தன் மகனை தொலைத்த விட்டு தேடும் ஹீரோவிடம் காண்பது பாசத்தின் வலி மட்டுமே.  ஷாமும் பூனம் கவுரும் தங்கள் ஒரே மகன்தான் தங்கள் உலகம் என்று வாழ்ந்து வரும் சாப்ட்வேர் தம்பதிகள். முதலில் வரும் ஒரு பாடலிலேயே ஷாம் தன் மகன் மீது வைத்திருக்கும் அன்பினை அழகான ஹைக்கூ போல் காட்டி விடுகிறார்கள். மகனின் 6 வது பிறந்தநாளில் நண்பர்கள் அனைவரையும் வீட்டிற்கு அழைத்து 6 எண்ணுள்ள மெழுகுவத்தியை ஏத்தி கொண்டாடிவிட்டு மாலையில் பீச்சிற்கு சென்று குழந்தையுடன் விளையாடிவிட்டு வரும் பொழுது கண் இமைக்கும் நேரத்தில் சிறுவன் தொலைந்து போகிறான். ஷாமும் அவரது மனைவியும் மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை பித்து பிடித்த்து போல் 'கௌதம் கௌதம் ' என்று கத்திக் கொண்டே பீச் முழுவதும் தேடுகிறாகள். அவாகளின் நிலையை பாத்த ஒருவர் அருகில் இருக்கும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று கம்ப்ளெய்ண்ட் ஒன்றை தரச் செய்கிறார்  கம்ப்ளெய்ண்ட் பெற்ற ஏட்டு ஏதாவது தகவல் கிடைத்தால் அழைப்பதாக சொல்லி அனுப்பி வைக்கிறா. வீட்டிற்கு வந்து இருவரும் அழுது கொண்டே கழித்து விட்டு காலையில் சென்று இன்ஸ்பெக்டரை  காணும்பொழுது இவர்களின் நிலையை கண்ட அவா ஒரு கான்ஸ்டபுளை அழைத்து ஒரு குறிப்பிட்ட ஒரு ஆளை சென்று காண அழைத்து செல்ல சொல்கிறார். இந்த இடத்திலுருந்துதான் குழந்தை கடத்தலின் வேறு ஒரு உலகத்தை காண நம் மனதை கல்லாக்கி கொண்டு பயணப்பட வேண்டும். இவாகள் சென்று காண்பது ஒரு ஊனமுற்ற பிச்சைகாரனை அவன் தனக்கொன்றும் இதை பற்றி தெரியாது என்று சொல்லி நழுவப் பார்க்கிறான். பூனம் கவுர் அவன் காலை பிடித்து கதறும்பொழுது மனமிறங்கி நகரிக்கு சென்று கிருஷ்ணாராவ் என்பவனை பார்க்க சொல்கிறான். அடுத்து ஹுரோ தன் நண்பர்களுடன் நகரிக்கு பயணப்படுகிறான். அங்கு சென்று இவர்கள் பார்க்கும் கிருஷ்ணா ராவ் பெண்களை வைத்து தொழில் செய்யும் ஓரு பிம்ப். தனக்கொன்றும் தெரியாது என்றும் என் இடத்தை விட்டு போகவாவிட்டால் அனைவரையும் தீர்த்து கட்டி விடுவேன் என்று மிரட்டுகிறான். மீண்டும் மனமுடைந்த ஷாம் மற்றும் திரும்ப சென்னைக்கே வருகிறார்கள். ஷாம் ஒரு முடிவுடன் தனி ஆளாக கிளம்பி மகனுடன் தான் வீட்டிற்கு வருவேன் அதுவரை ஜாக்கிரதையாக இருக்குமாறு மனைவியிடம் சொல்லி விட்டு கிளம்புகிறார். ஒரு டாக்ஸி டிரைவர் இவருக்கு உதவ முன் வருகிறார். முன்பொருமுறை பிச்சைகாரனுடன் சேர்த்து ஒரு ஆந்திராகாரனை பார்த்ததாகவும் அவரை ஆந்திரா வரை சென்று தன் காரில் விட்டு வந்ததாகவும் சொல்லி அந்த நபரை பார்க்க இருவரும் மீண்டும் ஆந்திரா செல்கிறார்கள். அந்த நபர் தனககொன்றும் தெரியாது எனவும் சென்னை வந்தால் பெண்கள் விஷயமாகத்தான் பிச்சைகாரனை பார்ப்பேன் என்றும் இதை தவிர வேறு ஒன்றும் தெரியாது எனவும் தன் பேரக் குழந்தையின் தலை மீது கை வைத்து சத்தியம் செய்கிறான். இதை நம்பி கிளம்ப தயாரான ஷாம் நொடிப் பொழுதில் அவன் பொய் சொல்கிறான் என்பதை அறிந்து கொண்ட ஷாம் அவன் பேரக் குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவனிடம் உண்மையை வரவழைக்கிறான். அவன் கரீம் நகரில் இருக்கும் ஒருவனுக்கு போன் செய்து சென்னை பையனை பற்றி கேட்க அவன் குறிப்பாக சென்னை பையனை பற்றி ஏன் கேட்கிறாய் என்று சந்தேகப்பட்டு போனை கட் செய்து விடுகிறான். அவன் ஷாமிடம் உன் பையனை போலீஸ் தேடுகிறது என் தவறாக நினைத்து விட்டான்.இனி அவன் உன் குழந்தையை கொன்று விடுவான் சீக்கிரம் அங்க சென்று உன் குழந்தையை காப்பாற்று என்று கூறுகிறான். அவனுக்கு நன்றி சொல்லிவிட்டு கிளம்பும் சமயத்தில் ஷாம் தான் கத்தியை வைத்து மிரட்டிய அவனின் பேரக் குழந்தையிடம் மன்னிப்பு கேட்பது மனிதநேயத்தின் உச்சம். கரீம்நகர் மாட்டுச்சந்தையில் இருப்பவனை பார்த்து மகனை பற்றி கேட்கும் ஷாமிடம் உன் மகனை கொன்று மூட்டை கட்டி வைத்திருக்கிறேன் போய் பார் என்கிறான் பதறிப்போன ஷாம் அங்கிருக்கும் ஒரு மூட்டையில் ஒரு சிறுவனின் கால் மட்டும் தெரிவதை பார்த்து அதனை தொட்டு கதறும் இடம் கண்ணீரை வரவழைக்கும்.அங்கிருக்கும் ரவுடி இவரை கொலை செய்ய தாக்குதல் நடத்த அவனை கொல்கிறார் ஷாம் அவன் இறக்கும் தருவாயில் போபாலில் இருக்கும் திவாகர்  ( அனில் முரளி) என்பவனை முடிந்தால் போய் பார் அவனுக்கு தெரியும் உன் குழந்தையை பற்றி என்று கூறுகிறான். போபாலுக்கு ஷாமும் டிரைவரும் சென்று திருநங்கை போல் இருக்கும் ஒருவனை பார்கிறார்கள் அவன் அவர்களை திவாகரை பார்க்க அழைத்து செல்கிறேன் என்று கூறி ஒரு மொட்டை தலையனிடம் அழைத்து செல்கிறான். அவன் இவர்களிடம் ஒரு கோடி பணம் கேட்கிறான் பையனை விடுவிக்க அப்படி இப்படி பேசி கடைசயில் ரூ 50 இலட்சம் தந்தால் குழந்தையை விட்டு விடுவதற்கு சம்மதிக்கிறான். ஷாம் சென்றவுடன் அந்த திருநங்கை போல் பேசும் நபர் மொட்டை நபரை பொளேரென அடித்து ' இந்த திவாகர் சொன்னத மட்டும் சொன்னா போதும் நீயா எந்த முடிவும் எடுக்க கூடாது ' என்று சொல்கிறார். இவர்தான் படத்தின் மெயின் வில்லன் என்று நமக்கு தெரிய வருகிறது.ஷாம் தன் மனைவியிடம் போன் செய்து கம்பெனியில் லோன் கேட்டாவது அல்லது வீட்டை விற்றாவது தான் சொல்லும் வங்கி கணக்கிற்கு ரூ 50 இலட்சம் பணபரிமாற்றம் செய்ய சொல்லுகிறார். அவரது மனைவியும் ஷாம் சொன்ன படி செய்து பண பரிமாற்றம் செய்கிறார். ஆனால் அதற்குள் வில்லனிடம் அடைபட்டிருக்கும் ஒரு ஸகூல் யூனிபார்ம் அணிந்த மாணவி ஷாமின் காலை பிடித்து தன்னை கர்பாற்ற சொல்லி கதறுகிறாள். அவளை காப்பாற்ற மறுக்கும் ஷாம் பின் தன் மகனை நினைத்து ஒரு கணம் மறந்து அந்த பிஞ்சு குழந்தையை காப்பாற்றி அங்கிருந்து தப்பி அந்த மாணவியை பத்திரமாக ஒரு இடத்தில் சோத்து விட்டு திரும்ப வந்து பார்க்கும்பொழுது அங்கிருந்த வில்லன் கூட்டம் அந்த இடத்தை காலி செய்து விட்டு வேறு இடத்திற்கு தப்பி விடுகிறது. அங்கு தன் மகனினன் சட்டையை பார்க்கும் ஷாம் தன் மகன் அருகிலேயே இருந்தும் கோட்டை விட்டு விட்டோமே என்று கதறுகிறார். அந்த நேரம் மனைவி போன் செய்து தான் பணம் பறிமாற்றம் செய்த விஷயத்தை கூறுகிறார். பணமும் போய் பையனும் போய் ஷாமின் நிலமை மிகவும் பரிதாபமாக ஆகிவிடுகிறது. அங்கிருக்கும் மொபலை எடுத்து வில்லன் திவாகரை தொடர்பு கொண்டு பேசும்பொழுது ' உன் மகனை மீட்க கிடைத்த நல்ல சந்தர்ப்பத்தை நீயாக கெடுத்து கொண்டாய் இனி உன் மகனை நீ எங்கு தேடினாலும் கிடைக்கா மாட்டான் அவன் அலகாபாத்லயோ,பம்பாய்லயோ,கொல்கத்தாவிலயோ பிச்சை எடுத்துக்கிட்டிருப்பான் முடிஞ்சா கண்டுபிடி ' என்று ஏளனம் செய்கிறான். அதன் பின்னர் ஷாம் ஒரு பிச்சைகாரனை போல் ஊர் ஊராக தன் மகனை தேடி அழைகிறான். ஒரு நாள் தன் மனைவியிடம் பப்ளிக் போனிலிருந்து பேசுகிறான் எதிர் முனையில் ஷாமின் மனைவி 'எங்கடா இருக்க சீக்கிரம் வாடா என்க்கு தனியா இருந்து பைத்தியமே பிடிச்சிரும் போல இருக்கு உனக்கு எத்தனை குழந்தை வேணும் நான் பெத்து தரேன்  நீ வந்துட்றா ' என்று சொல்லி அழும் இடத்தில் காமத்தை மீறி கணவனின் மீதுள்ள காதல்தான் வெளிப்படுகிறது. கடைசியாக கொல்கத்தாவில் தெருவோரம் கண்கள் வீங்கி அநாதையாக கிடக்கும் ஷாமை ஒரு தமிழ் பேசும் பெரிவர் காப்பாற்றி அடைக்கலம் தருகிறார். அவருடன் சேர்ந்து சிறுவனை தேடும் ஷாம் குழந்தைகளை பிச்சை எடுக்க வைத்து பிழைப்பு நடத்தும் ஒரு கும்பலை சந்திக்கிறான்.அவர்களிடம் உள்ள குழந்தைகளை காட்ட சொல்கிறான். அவர்கள் காட்ட முடியாது என்று மறுப்பதுடன் போபாலில் இருக்கும் சுதாகரை போய் பார் அவன் குழந்தை கடத்துவதில் எல்லோருக்கும் கிங் என்று சொல்கிறான். ஆனால் அவனை ஏற்கனவே தான் கொன்று விட்டதாக கூறும் ஷாம் ' என்னை மாதிரி பிள்ளைய  தொலைச்ச அப்பனுங்க ஒவ்வொருவரும் உங்களை மாதிரி குழந்தைகளை கடத்துற நாலு பேரையாவது கொன்னாதாண்டா நீங்க திருந்துவீங்க ' என்று அவர்களிடம் சொன்னவுடன் பயந்து போன் அவர்கள் குழந்தைகளை பார்க்க அனுமதிக்கின்றனர். அங்கு இருக்கும் குழந்தைகள் ஷாமை பார்த்தவுடன் தங்களை எப்படியாவது காப்பாற்றும்படி கதறுகிறார்கள் அதில் ஷாமின் மகனும் அவரின் காலை பிடித்து கதறுவது ஷாமிற்குத் தெரியாமல் போகிறது. ஏனென்றால் அவன் தலைமுடியை சுரண்டி எடுத்து கண்ணோரத்தில் அடிபட்டு கண்ணாடி போட்டுக் கொண்டு அடையாளமே தெரியாமல் இருக்கிறான். ஷாமும் தாடியுடன் இருப்பதால் அந்த பையனுக்கும் தன் அப்பாவை அடையாளம் தெரியவில்லை. ஷாம் அழுது கொண்டே அந்த முஸலீம் பெரியவரிடம் ' என் மகன் இங்கு இல்லை' என்று கூறிவிட்டு அந்த இடத்தை செல்ல முற்படுகிறார். படத்தை பார்த்துக் கொண்டிருக்கும் நாம் மனப் பதைப்புடனும் கண்ணீர் மல்க காத்துக்கொண்டிருக்க அப்போது ஷாம் தன் மகனின் சட்டை தன் பையில் இல்லாதது கண்டு அதை உள்ளே கிடக்கிறதா என்று பார்க்க செல்கிறார். அதே சமயம் அந்த பையன் அங்கு கிடக்கும் தன் சட்டையை எடுத்து பார்த்து கொண்டிருக்கிறான் . அதை பார்த்த ஷாம் அந்த பையனின் பின்புறமாக கையை வைத்து அந்த சட்டையை இழுக்க அந்த பையன் திரும்பாமலேயே முன்புறமாக இழுக்க அவன் தோளை தொட்டு திருப்பி ஷாம் பார்க்கும்பொழுது தன் மகன் தான் என்று அடையாளம் கொண்டு வாரி அனைத்து முத்தமிடுகிறார்.' டேய் அப்பாடா என்ன பார்றா  என்று சொன்னவுடன் பையன் ' எனக்கு தெரியும்பா நீ எப்படியும் வந்து கூட்டிகிட்டு போயிடுவன்னு ஏம்பா இத்தனை நாளா வரல என் மண்டையில அடிச்சதுல கண்ணு கூட சரியா தெரியலப்பா ' என்று பையன் அழுவும்போது நமது கண்களிலும் கண்ணீர் வந்து முட்டுகிறது. தியேட்டரே எழுந்து நின்று கைத்தட்டுகிறது எழுத்தும்,ஆக்கமும் V.Z.துரை என்று திரையில் ஓடும்பொழுது

No comments:

Post a Comment